சமீபத்தில் லண்டனில் நேற்று இன்று நாளை என்ற இசை நிகழ்ச்சியை ரகுமான் நடத்தினார். இதில் தமிழ் மற்றும் இந்தி பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய ரசிகர்கள் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். தங்களது டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து ரகுமான் கூறுகையில், ‘எங்கள் இசைக் குழு சிறப்பான நிகழ்ச்சியை தர முயன்றது. அதேபோல் நேர்மையாகவே நாங்கள் நடந்து கொண்டோம். வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு தந்து வருகின்றனர். ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை’ என்றார்.