பெங்களுரில் பார் டான்ஸரை வலை போட்டு தேடும் திவ்யா
3/17/2013 4:29:30 PM
சென்னை: பார் டான்ஸர்கள் வாழ்க்கை பற்றி அறிய பெங்களூரில் அவர்களை வலைபோட்டு தேடுகிறார் திவ்யா. இது பற்றி அவர் கூறியதாவது:‘நீர் டோஸ்Õ என்ற கன்னட படத்தில் பார் டான்ஸராக நடிக்கிறேன். 3 பேருக்கு இடையே உள்ள நட்பை பற்றிய கதை. இப்படத்தை ஒப்புக்கொள்ளும்போது பார்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பார் டான்ஸர் யாரும் இருப்பார்களோ என்று சந்தேகம் இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது இருப்பதாக தெரிவித்தார்கள். அவர்களை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களது வாழ்க்கை அனுபவம் பற்றி பேசுகிறேன். அதன்பிறகு நடிப்பேன். சமீபத்திய எனது படங்கள் ஹிட்டாக அமைந்தது அதிர்ஷ்டம். வெற்றிக்கு அக்கறையும் மிக அவசியம். ஒரு வேடத்தை ஏற்றால் அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்வேன். நிறைய அழகான பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவர்களது அந்த உணர்வுதான் எனது வேடங்களை நான் கடின உழைத்து செய்வதற்கான தூண்டுகோலாக இருக்கிறது. இவ்வாறு திவ்யா கூறினார்.