மம்தாவுக்கு திருமணமா?
மம்தாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலையாள மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டால் மறுக்கிறார். Ôதிருமணம் பற்றி இப்போதைக்கு யோசிக்கவ¤ல்லை. ஆனால் உரிய வயதில் கண்டிப்பாக திருமணம் செய்வேன். அதை சாதிக்கப் போகிறேன். இதை சாதிக்கப் போகிறேன் என்றெல்லாம் கனவுகள் கிடையாது. இப்போது நிறைய மலையாள படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. இந்தியில் நடிக்க ஆரம்பித்தால் திருமணம் தாமதமாகலாம். இல்லாவிட்டால் சரியான நேரத்தில் நடக்கும்Õ என்றார் மம்தா.
|
கவர்ச்சியாக காட்டியதால் அப்செட்
கேள்விப்பட்டோம்: ‘அழகான பொண்ணுதான்’ படத்தில் தன்னை அதிக கவர்ச்சியாக காட்டியதால் அப்செட்டில் இருக்கிறார் நமீதா.
கேட்டோம்: பட வாய்ப்பின்றி அவர் இருந்தபோது நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம். படத்தின் கதையை கேட்டு முழு சம்மதத்தோடு நடித்துவிட்டு இப்போது வருத்தப்படுவது போல காட்டிக் கொள்வதில் என்ன நியாயம் என்கிறார் இயக்குனர்.
|
மீண்டும் சான்ஸா?
கேள்விப்பட்டோம்: சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார் காயத்ரி ரகுராம்.
கேட்டோம்: நடிக்கணும்னு ஆசைப்பட்டால் வாய்ப்பு தேடி அலைய வேண்டியதே இல்லை. இப்போது பத்து படங்களுக்குமேல் நடனம் அமைத்து வருகிறேன். நான் நினைத்தால் அந்தப் படங்களில் நடித்திருக்க முடியும். இப்படிப்பட்ட கேரக்டரில்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். அப்படியான கேரக்டருடன் யாரும் அணுகவில்லை. அதோடு இப்போது நடனத்தில் நான் பிசி என்கிறார் காயத்ரி ரகுராம்.
|
சாமியார் மேட்டரா?
கேள்விப்பட்டோம்: புதிதாக கிளம்பியிருக்கும் சாமியார் மேட்டரை ‘குரு சிஷ்யன்’ படத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
கேட்டோம்: படத்தில் சாமியார் மேட்டர் இருப்பது உண்மைதான். ஆனால், அது முன்பே திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட காமெடி காட்சி. நித்யானந்த சாமியார் மேட்டரை உல்டா பண்ணி எடுக்கவில்லை என்கிறார் ஷக்தி சிதம்பரம்.
|
தூங்குவது தப்பா?
கேள்விப்பட்டோம்: படப்பிடிப்பில் அடிக்கடி கேரவனுக்குள் படுத்து தூங்கி விடுகிறார் தமன்னா. இதனால் படப்பிடிப்பு தாமதமாகிறது.
கேட்டோம்: இன்றைக்கு தமிழில் அதிகம் நடிக்கும் நம்பர் ஒன் நடிகை தமன்னா. இரவு, பகல் என்று இடைவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் நேரம் கிடைக்கும்போது தூங்கிக் கொள்கிறார். ஆனாலும் ‘ஷாட் ரெடி’ என்றதுமே எழுந்து ஃபிரஷ்ஷாக செல்வார். இதுதான் நடக்கிறது என்கிறது தமன்னா வட்டாரம்.
|
சம்பளம் பற்றி என்னிடம் கேட்க கூடாது!
கேள்விப்பட்டோம்: சம்பளம் கூடுதலாக கேட்பதால் ப்ரியாமணிக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.
கேட்டோம்: தமிழ், மலையாளத்தில் படங்கள் இல்லை. அதற்காக ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவிழ்த்து விடுகிறார்கள். அதென்னவோ தெரியவில்லை. மீடியா என் சம்பளம் பற்றித்தான் அதிக அக்கறைப்படுகிறது. ஒரு கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகைகளைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை என்கிறார் ப்ரியாமணி.
|
எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல!-
எல்லா நடிகைகளையும ரஞ்சிதா போல நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் தப்பு செய்தார் என்பதால் எல்லோருமே அப்படியா செய்வார்கள் என்கிறார் நடிகை தமன்னா.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், நான் கோவிலுக்குப் போவேன். சாமி கும்பிடுவேன். அதோடு சரி. அளவுக்கதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை.
ரஞ்சிதா பற்றி நான் என்ன சொல்ல... அது அவர் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது...." என்றார்.தமன்னா
|
ரஜினியை கண் வைத்த சமீரா!
வாரணம் ஆயிரம், அசல் படங்களின் தமிழ் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சமீரா தற்போது சூப்பர் ஸ்டாரை கண் வைத்துள்ளார். ஏன் இந்த ஆசை? என்று அவரிடம் கேட்ட போது சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், வாரணம் ஆயிரம் தமிழில் எனக்கு பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. ஆனால் அசல் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்..." என்கிறார் சமீரா.
|