ஆன்மிகம் சார்ந்த புத்தக விழாவில் கே.பி.ஒய் பாலா பங்கேற்றார். தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ‘தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சுக ஞானநந்தம்’ இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் ஏ.நஜீரூல் அமீன், திரைப்பட நடிகர் ராமகிருஷ்ணா, பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும், திரைப்படத்துறை, தொழில்துறை, விளையாட்டுத்துறை, விவசாயத்துறை, சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் என சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கே.பி.ஒய் பாலா தொகுத்து வழங்கி கலந்துகொண்டார்.