Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செல்லமடா நீ எனக்கு விமர்சனம்...

தன்னைப் பெற்று வளர்த்த தாய், ‘பசங்க’ செந்தியை வெறுக்கிறார் வசீகரன். ஒருகட்டத்தில் வசீகரனின் கன்னத்தில் அறைந்து, ‘உன் தாய் செய்த தியாகம் என்ன என்று உனக்கு தெரியுமா?’ என்று, பல வருட ரகசியத்தை காதலி நேஹா உடைக்கிறார். பிறகு தாயும், மகனும் இணைந்தார்களா என்பது மீதி கதை.

தாயை வெறுக்கும் காட்சிகளும், பிறகு தனது தவறை உணர்ந்து தாயை தேடி பரிதவிக்கும் காட்சியிலும் வசீகரன் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. அழகாக இருக்கும் நேஹா அளவாக நடித்து மனதை கவர்கிறார். போஸ் வெங்கட், அமுதவாணன் மற்றும் மீரா கிருஷ்ணன், ரிஷா, செல்வா.ஆர் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர். கதையின் நாயகி ‘பசங்க’ செந்தி, மகனின் பாசத்துக்காக உருகி, கிளைமாக்சில் கண்களைக் குளமாக்குகிறார்.

ஆனந்த் சிவம் இயக்கியுள்ளார். அவருக்கு மதுரா வேள்பாரியின் கதை, வசனம் மற்றும் செல்வா.ஆர் ஒளிப்பதிவு, தாஜ்நூர் இசை உதவி செய்துள்ளன. வலிமையான கதையை எளிமையான முறையில் சொல்லியிருக்கின்றனர். திருடன் என்று தெரிந்தும் கூட, போஸ் வெங்கட்டை ‘பசங்க’ செந்தி காதல் திருமணம் செய்வது நெருடுகிறது.