Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிவனின் ஆற்றலை வெளிப்படுத்தும் பாடல்

சிவபெருமானின் ஆற்றல் மற்றும் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘அகரவா மகரவா’ என்ற தனி ஆல்பம் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி, லஷ்மன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கும் சாவியோ இயக்கியுள்ளார். யான் பவுண்டேஷன் வழங்கும் இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமி, தேசமங்கையர்க்கரசி, சிவ.சதீஷ்குமார், ரேகா மணி, ‘ரோமியோ ஜூலியட்’ லஷ்மன், வசந்தமணி, சுகுமார் அழகர்சாமி, எஸ்.சாம், ராஜவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோல்ட் தேவராஜ் பாடியுள்ளார். ‘நீலோத்தி’, ‘கற்றோடு பட்டம் போல’ போன்ற ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் சாரதி எழுதியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். எடிட்டிங் மற்றும் ஏஐ பணிகளை கவுதம் கவனிக்க, பிரதீப் குமார் தீபா தயாரித்துள்ளார். இப்பாடல் யான் தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.