Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏஐ மூலம் உருவான ‘தமிழ் கிறுக்கன்’

எழுத்தாளரும், பாடகருமான வாகீசன் ராசய்யாவுடன் இணைந்து, பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜெ.பி.லீலா ராம், ராஜு.கே, சரவணன்.பா, ரேகா.எல் தயாரித்துள்ள ஆல்பம், ‘தமிழ் கிறுக்கன்’. ஏஐ மூலம் உருவான காட்சிகளை கிரிபாகர் ஜெய்.ஜெ இயக்க, டின்சா எடிட்டிங் செய்துள்ளார். 5 பாடல்களும் தனித்தனி கருப்பொருளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

‘கிறுக்குத்தனம்’ என்பது குழப்பம் அல்ல; அது சுதந்திரமான மற்றும் மிகவும் ஆழமான மனித உணர்வுகளின் வெளிப்பாடு என்பதை ஆல்பம் வெளிப்படுத்துகிறது. முன்னதாக ‘காக்கும் வடிவேல்’ என்ற தமிழ் இன்டிபென்டெண்ட் சிங்கிள், ‘மெஜந்தா’ திரைப்படம் ஆகியவற்றுக்கு பிறகு உருவான ‘தமிழ் கிறுக்கன்’, பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்டின் 3வது முயற்சியாகும்.