Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெண்கள் உடை விவகாரம் சிரஞ்சீவிக்கு ரேவதி பதிலடி

சென்னை: பெண்கள் உடை விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு பதிலடி தரும் வகையில் ரேவதி கருத்து தெரிவித்தார். நடிகை ரேவதி சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது இவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் உடை குறித்து ஒரு கேள்வியை கேட்டார். அதாவது, சீக்ரெட் பகுதிகள் தெரியும் படி உடை அணிகிறார்கள், பெர்சனல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள் என்பது போல் அவர் கேள்வி கேட்க, அதற்கு நடிகை ரேவதி, ‘‘திருமணத்தில் பட்டு புடவை அணிய வேண்டும், பீச்சில் பிகினி போடவேண்டும் என்று ஒன்று உள்ளது.

ஏங்க, அதற்காக புடவையை கட்டிக்கொண்டு கடலில் குதிக்கவா முடியும்” என கோபமாக பதில் அளித்தார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. நடிகைகள் பலர் இப்படி செய்கிறார்கள் என பொதுவாக சாதாரணமாகத்தானே கேட்டேன். அதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள் என அந்த நிருபர் சொன்னதும், நான் கோபப்படவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டு, அங்கிருந்து ரேவதி சென்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, நடிகைகள் உடை விஷயத்தில் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையிலேயே ரேவதி இப்படி சொல்லியிருக்கிறார் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.