கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு ேபாலீஸ் அதிகாரி நானி, நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில், ஒரே பாணியில் தொடர்ந்து பலர் கொடூரமாக கொல்லப்படும் ‘பிளாக் வேர்ல்ட்’ சீரியல் கில்லர் நெட்வொர்க் பற்றி கண்டுபிடிக்கிறார். பிறகு அவரே 2 கொலைகள் செய்து, கருப்பு உலகிற்குள் கம்பீரமாக பிரவேசிக்கிறார். வந்தது போலீஸ் என்பதை அறிந்த பிளாக் வேர்ல்ட் சீரியல் கில்லர்கள், நானியை என்ன செய்தனர் என்பது மீதி கதை.
நானி, படம் முழுக்க அவரது ஒன்மேன் ஷோவின் ருத்ர தாண்டவம்தான். சண்டைக் காட்சிகளில் அதிக வன்முறை இருந்தாலும், கதையுடன் ஒன்றி பார்க்கும்போது நியாயமாக தெரிகிறது. அவருக்கு லிப்லாக் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதிலேயே நிதி ஷெட்டி காலத்தை கடத்துகிறார்.
சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சூர்யா னிவாஸ், அதில் பாலா உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர். சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை, படத்தின் வேகத்தை அதிகரிக்க உதவி செய்துள்ளது. டாக்டர் சைலேஷ் கொலானு எழுதி இயக்கியுள்ளார். ராஜஸ்தான், விசாகப்பட்டினம், காஷ்மீர், பீகார், அருணாசல பிரதேசம் ஆகிய லொகேஷன்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ரத்த வெள்ளத்தில் நியாயத்தை தேடியிருக்கிறார் ஹீரோ. அடுத்த பாகத்துக்கு கார்த்தி என்ட்ரி கொடுத்திருக்கிறார்.