சென்னை: திரிஷா தனது தோள் பகுதியில் கேமராவை டாட்டூவாக வரைந்துள்ளார். இதனால் அவர் கேமராமேனை காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகை த்ரிஷா தனது முதுகில் தோள்பட்டை பகுதியில் கேமரா ஒன்று இருப்பது போன்ற டாட்டூவை போட்டிருந்தார். சினிமா மீது உள்ள காதல் காரணமாக அந்த டாட்டூவை திரிஷா குத்தியிருக்கிறார் என அவரது அம்மா கூறினார். இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஸ்லீவ்லெஸ் உடையில் கலந்து கொண்ட திரிஷாவின் அந்த பழைய டாட்டூ பளிச்சென தெரிகிறது.
உடனே நெட்டிசன்கள் திரிஷாவின் புதிய டாட்டூ இது என டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் திரிஷா, கேமராமேன் ஒருவரை காதலிப்பதாகவும் அதனால்தான் இந்த டாட்டூவை நிரந்தரமாக போட்டு வைத்திருக்கிறார் என்றும் தகவல் பரவியுள்ளது. இது சினிமாவுக்கு மெகா கேமராவாக இருப்பதால் அவர் சினிமாவை சேர்ந்த ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது. இது பற்றி திரிஷாவிடம் அவரது நெருங்கியவர்கள் கேட்டபோது, அவர் புன்னகையை மட்டும் பதிலாக தந்தாராம்.