ஐதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அமேசான் காடுகளில் இந்த படம் உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை. இந்து கடவுள்களில் ஒன்றான அனுமனை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 3 பாகங்களாக உருவாக்க இருப்பதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே. ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ இரண்டு பாகங்கள் வெளியான நிலையில். தற்போது அவரது அடுத்த படம் மூன்று பாகங்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.