அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ என்ற படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு பிரச்னைகள் காரணமாக சொல்லப்படுகிறது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்துக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம், ‘காத்தி’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதலில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த இப்படம், திடீரென்று ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் 11ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது படத்தை பற்றி எந்தவொரு புரமோஷன் பணிகளும் தொடங்கப்படாத காரணத்தினால், மீண்டும் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அடுத்த வெளியீடு தேதி எப்போது என்பதை விரைவில் படக்குழுவினர் அறிவிக்கின்றனர். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள இதை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நாகவல்லி வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், ஒரே நேரத்தில் ‘காத்தி’ படம் திரைக்கு வருகிறது.