தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

நாய்சேகர் இயக்குனருடன் இணைந்த அன்னா பென்

சென்னை: நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் தயாரிப்பில், ‘நாய்சேகர்’ கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம், காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் அவர்...

சென்னை: நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் தயாரிப்பில், ‘நாய்சேகர்’ கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம், காதல் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

கார்த்திக் ஸ்ரீநிவாஸ், மகாவீர் அசோக் இணைந்து தயாரிக்கின்றனர். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான ‘நாய்சேகர்’ என்ற படத்தை இயக்கியவரும் மற்றும் ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கீ’ உள்பட பல படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்கள் மற்றும் யூடியூப்புக்கான வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.

படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், ‘ஃபீல்குட் உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை இருக்கும். ஜோடிப் பொருத்தம் பற்றி பேசும் கலகலப்பான இப்படம், ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும்’ என்றார். ராம் பாண்டியன் எடிட்டிங் செய்ய, ஸ்ரீசசிகுமார் அரங்குகள் அமைக்கிறார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்து, இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார்.