தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆணவக்கொலை பற்றிய படத்தில் அனுமோல்

தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘கண்ணுக்குள்ளே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுமோல். அதன்பிறகு ‘இவன் மேகரூபன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த அனுமோலுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. ஆனால், தமிழில் அவர் நடித்த ‘ஒரு நாள் இரவில், ‘திலகர்’, ‘ஃபர்ஹானா’,...

தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘கண்ணுக்குள்ளே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுமோல். அதன்பிறகு ‘இவன் மேகரூபன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த அனுமோலுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. ஆனால், தமிழில் அவர் நடித்த ‘ஒரு நாள் இரவில், ‘திலகர்’, ‘ஃபர்ஹானா’, ‘ஹரா’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. மீண்டும் மலையாளத்தில் கவனம் செலுத்தினார். அதன்பின் தமிழில் அவர் நடித்த ‘அயலி’ என்ற வெப் தொடர் ஹிட்டானது.

தற்போது தமயந்தி இயக்கி உள்ள ‘காயல்’ என்ற படத்தில் அம்மா வேடத்தில் அனுமோல் நடித்துள்ளார். இப்படம் ஆணவக்கொலை, தென் மாவடட்ட சமூக பிரச்னை, பெண்களின் அரசியல் என பல விஷயங்களை அழுத்தமாக பேசுகிறது. படம் குறித்து பேசிய அனுமோல், ‘‘எழுத்தாளர் தமயந்தி இந்த படத்தின் கதையை சொல்வதற்கு முன்பு வரை அவரை பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. பின்னர், அவர் யார் என்பதை புரிந்து கொண்டேன். இந்த படத்தை பலர் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். இந்த கதை பேசப்பட வேண்டும். அனைத்து மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக நடித்தேன்.

புதுச்சேரி, வேளாங்கண்ணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த பட தயாரிப்பாளரை பார்க்காமலே இயக்குனர் படமெடுத்துள்ளார். நானும் அப்படிதான் நடித்தேன். அவர் வெளிநாட்டில் இருந்து இந்த படத்தை தயாரித்தார். இப்படிப்பட்ட கதைகள், தயாரிப்பாளர்கள் மலையாள சினிமாவுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.