தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

டப்பிங் தியேட்டரில் இயக்குனர் டார்ச்சர்: அனுபமா பரமேஸ்வரன் பகீர் புகார்

    ஐதராபாத்: தனுஷுடன் ‘கொடி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது துருவ் விக்ரம் ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘கிஷ்கிந்தபுரி’ என்ற படத்தில் இளம் இயக்குனர் கெளஷிக் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் அனுபமா கலந்து...

 

 

ஐதராபாத்: தனுஷுடன் ‘கொடி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது துருவ் விக்ரம் ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘கிஷ்கிந்தபுரி’ என்ற படத்தில் இளம் இயக்குனர் கெளஷிக் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் அனுபமா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘‘திகில் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வகை. இப்படியான கதையை கெளஷிக் கூறியபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் மூன்று வயதில் இருந்தே திகில் படங்களை பார்த்து வருகிறேன்.

 

சினிமாத்துறைக்கு வந்தபின், இத்தனை ஆண்டுகளாக திகில் கதைக்காக காத்திருந்தேன். கெளஷிக் கூறிய கதை எனக்கு முதலில் புரியவில்லை, நீங்கள் முடிந்தால் வசனங்களை புரிந்து கொள்ள ஒரு அகராதியை கொண்டு செல்லுங்கள் என பலரும் என்னிடம் சொன்னார்கள். இந்நிலையில் வசனங்களை பேசுவதில், டப்பிங் ஸ்டுடியோவில் கௌஷிக் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார். முறையான பயிற்சி வேண்டும் என நான் கூறிய பிறகே பயிற்சி தரப்பட்டது. அதன்பிறகே அந்த வசனங்களை என்னால் பேச முடிந்தது’’ என்றார்.