தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விமர்சனங்களால் அதர்வாவுக்கு பாதிப்பா?

தமிழ் படவுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹீரோக்களில் ஒருவர், மறைந்த முரளி. அவரது மூத்த மகன் அதர்வா முரளி, நிறைய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்றாலும், அதில் ஓரிரு படம் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றது. அவரது நடிப்பில் வெளியான ‘டிஎன்ஏ’ என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோருடன் இணைந்து ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்துள்ள அதர்வா முரளியிடம், ‘வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அதர்வா முரளி, ‘கடுமையான விமர்சனங்கள் இதுவரை மிகப்பெரிய அளவில் வரவில்லை என்றாலும், எனக்கு முன்னால் நிறைய சவால்கள் இருந்தது உண்மை.

என்னதான் நான் பிரபல நடிகரின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கான உத்வேகத்தை கொடுத்து, நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே, எந்த விமர்சனமும் என்னை கடுமையாக பாதிக்கவில்லை’ என்றார்.