தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

விமர்சகர்களை கடுமையாக சாடிய இயக்குனர்

விஜய் சேதுபதி, திரிஷா, கவுரி கிஷன், ஜனகராஜ் நடிப்பில் வெளியான ‘96’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். பிறகு கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், திவ்யா நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இவ்விரு படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்...

விஜய் சேதுபதி, திரிஷா, கவுரி கிஷன், ஜனகராஜ் நடிப்பில் வெளியான ‘96’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். பிறகு கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், திவ்யா நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இவ்விரு படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘தமிழில் நான் இயக்கிய ‘96’ என்ற படத்தை முதலில் இந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து இயக்க திட்டமிட்டேன். அது கைகூடாத நிலையில் தமிழில் இயக்கினேன். இனி வரும் காலத்தில் ‘96’, ‘மெய்யழகன்’ ஆகிய படங்களை நான் இந்தியில் ரீமேக் செய்து இயக்குவேன். தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அது நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது.

இப்போது விமர்சனம் என்ற பெயரில் அவர்கள் பயன்படுத்தும் மொழி, பேசும்விதம் போன்றவை நாகரீகமற்ற முறையில் இருக்கிறது. முக்கியமாக, அவர்கள் குறிவைப்பது வேறொன்றாக இருக்கிறது. ரிலீசான படத்தின் முதல் வார வசூலை மட்டும் குறிவைத்து பேசுகின்றனர். அப்படி செய்தால், அடுத்த முறை தயாரிப்பாளர்கள் அவர்களிடம் வருவார்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் செய்பவர்கள் இப்போது 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர். எனவே, விமர்சகர்களுக்கான நெறிமுறையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரைவில் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று காட்டமாக பேசியுள்ளார்.