கெவி படத்தில் தேவா பாடிய மலைவாழ் மக்கள் கீதம்
பசுமையான கொடைக்கானல் மலையிலுள்ள கெவி என்ற குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதமாக, ‘மா மலையே-எங்க மலைச் சாமியே. ஓம் மடியில்-எங்க உசுரு கெடக்குதே. இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல-உள்ள முள்ளு பழுக்குமா?’ என்ற பாடலை வைரமுத்து எழுத, இசை அமைப்பாளர் தேவா பாடினார். பாடலை எழுதிய வைரமுத்து, ‘இது மலைவாழ் மக்களின் கீதமாக இருக்கும்’ என்றுகூறினார்.
