மீண்டும் புராண படத்துக்கு யு/ஏ
அவர் தனது தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பையும் மீறி விஷ்ணுவை வணங்குகிறார். இறைவன் பிரம்மாவிடம் இருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிப்பதற்காக, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார் என்பது இப்படத்தின் கதை. அஸ்வின் குமார் எழுதி இயக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்துக்கு சென்சார் குழு ‘யுஏ ‘சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அதாவது, படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக சொல்லி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
வழக்கமாக புராண படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்க மாட்டார்கள். இது புராண கதை கொண்ட அனிமேஷன் படம் என்றாலும், சென்சார் குழுவினர் ‘யுஏ’ வழங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான ‘கண்ணப்பா’ படத்துக்கும் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ‘மகா அவதார் நரசிம்மா’ படத்தின் ஹீரோ பிரஹலாதன், தனது கைகளில் ‘யுஏ’ சான்றிதழை சுமந்து நிற்கும் ஒரு போட்டோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது சுவாரஸ்யமாக இருப்பதோடு மட்டுமின்றி, ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.