தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அடுத்த சிம்​பொனியை எழுதுகிறேன்: இளையராஜா அறிவிப்பு

சென்னை: லண்டனில் கடந்த மார்ச் 8ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்​பொனி இசையை, அங்குள்ள ஈவென்டிம் அப்​போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்​தார் இளையராஜா. இதை அவர், உலகின் மிகச்சிறந்த ராயல் பில்​ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அரங்கேற்றினார். அவரது இசைக்குறிப்புகளை நூற்​றுக்கணக்கான கலைஞர்கள் பல்​வேறு இசைக்கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்தது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலமாக, ஆசிய கண்​டத்தில் இருந்து சிம்​பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசை அமைப்பாளர் என்ற மிகப்பெரிய சாதனையை இளை​யராஜா படைத்தார்.

இந்நிலையில், அடுத்து தனது புதிய சிம்பொனி இசை குறித்த அறிவிப்பை நேற்று இளை​யராஜா​ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன். அத்துடன் புதிய படைப்பாக, ‘சிம்பொனி டான்சர்ஸ்’ என்ற புதிய இசைக்கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.