தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

காதல் கதையில் நடிக்க மறுக்கிறேனா? சூர்யா சேதுபதி

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமான படம், ‘பீனிக்ஸ்: வீழான்’. அவரது மனைவி ராஜலட்சுமி தயாரிக்க, சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வெற்றிபெற்ற நிலையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மூணார் ரமேஷ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘வத்திக்குச்சி’ திலீபன், பழனி, ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரோஹித் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது...

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமான படம், ‘பீனிக்ஸ்: வீழான்’. அவரது மனைவி ராஜலட்சுமி தயாரிக்க, சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வெற்றிபெற்ற நிலையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மூணார் ரமேஷ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘வத்திக்குச்சி’ திலீபன், பழனி, ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரோஹித் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது அனல் அரசு பேசுகையில், ‘இப்படத்துக்காக சாவின் விளிம்பு வரை சென்று பணியாற்றியுள்ளேன். இந்த வெற்றி எனக்கு மட்டும் பயனளிக்காது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் பயனளிக்கும். இதை சூர்யா சேதுபதியின் படமாக பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாக பாருங்கள். இக்கதை சூர்யா சேதுபதிக்காக எழுதியது இல்லை. ஆனால், அவர் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்’ என்றார்.

சூர்யா சேதுபதி பேசுகையில், ‘இப்படத்தை பார்த்துவிட்டு என்னையும், படக்குழுவினரையும் பலர் பாராட்டினர். அனல் அரசு என்னை தேர்வு செய்யவில்லை என்றால், இங்கு நான் இருந்திருக்க மாட்டேன். ராஜலட்சுமி, அனல் அரசு, ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் ஆகியோர் மிகப்பெரிய பலமாக இருந்தனர்.

நடிப்பில் எனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆக்‌ஷன் ஹீரோவாக நடிப்பதா? காதல் கதை கொண்ட படங்களில் நடிப்பதா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். அடுத்த படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்’ என்றார்.