செல்வராகவனை டென்ஷனாக்கிய திரை விமர்சனங்கள்
கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வரும் விஷயம், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்பதுதான். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படம் அப்போது தோல்வி அடைந்தது. ஆனால், காலம் கடந்து அப்படத்ைத ரசிகர்கள் இப்போது கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான தனது ஆதங்கத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படுத்திய செல்வராகவன், ‘நான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியானபோது, சிலர் வேண்டுமென்றே செய்த எதிர்மறை திரை விமர்சனங்கள் எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது.
ஆனால், இப்போது அவர்களே முன்வந்து கொண்டாடுகின்றனர். ஆனால், இப்போது அப்படத்தை கொண்டாடுவதால் என்ன பலன் கிடைத்துவிட போகிறது? அப்படத்தில் நிறைய பணமும், நேரமும் முதலீடு செய்யப்பட்டது. ஒரு படம் ரிலீசாகும்போதே அதன் தன்மையை பொறுத்து தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் இப்போது கொண்டாடினாலும் கூட, எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ 2ம் பாகம் உருவாகுமா என்று கேட்டால், அதற்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. ஆனால், அதற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி வருகிறேன்’ என்றார். கடந்த 2010ல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.
