பெண்ணின் உரிமைக்காக போராடும் கதை: மரியா படத்துக்கு சர்வதேச விருதுகள்
கதைப்படி ஒரு பெண்ணுக்கு திடீரென்று வேறொரு விஷயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. பணியின் காரணமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உணர்வு மனதை சிதைக்கிறது. இதையடுத்து அப்பெண்ணை சமூகம் தூற்றுகிறது. அவரது எண்ணத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது. அப்பெண்ணுக்கான தனிப்பட்ட உணர்வுகளை உறவினர்கள் மட்டுமின்றி, பெற்ற தாயும் ஏற்க மறுக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் கதையிது. வரும் ஆகஸ்ட்டில் படம் திரைக்கு வருகிறது. முன்னதாக மத்திய பிரதேசம், புதுடெல்லி, கேரளா, மலேசியா, லண்டன், இத்தாலி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் கிடைத்தது.