
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் சினிமாவை விட்டு விலகியிருந்தேன் என்பது தவறான தகவல். கன்னடம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். மலையாளத்தில் திடீரென்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். ‘ஜலதாரா பம்ப்செட் சின்ஸ் 1962’ படத்தில், அனுபவம் மிகுந்த ஊர்வசியுடன் இணைந்து நடிக்கும்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இனி அடிக்கடி என்னை மலையாளத்தில் பார்க்கலாம். மற்ற மொழிகளிலும் தீவிர கவனம் செலுத்தி நடிப்பேன்’ என்றார்.
