Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்சார் கெடுபிடி எதிரொலி; கங்கனாவின் எமர்ஜென்சி நாளை ரிலீசாகவில்லை

மும்பை: பாஜ எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனவத் இந்தியில் தயாரித்து இயக்கி, இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படம், நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தில் சீக்கியர்களை தீவிரவாதிகளாகவும், தேசவிரோதிகளாகவும் காண்பித்துள்ளதாக கூறி, சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே, இப்படத்துக்கு உடனே தடை விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழுவினர், ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளையும் கருத்தில் கொள்வதாகச் சொல்லி, நிறைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டது. இதனால், இப்படம் நாளை ரிலீசாகவில்லை. இதுகுறித்து கங்கனா ரனவத் ஆவேசத்துடன் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘என் படத்துக்கும் எமர்ஜென்சி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.