Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

3 கதைகளை சொல்லும் ரோஜா மல்லி கனகாம்பரம்

சென்னை: ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே.பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா நடிக்கிறார்கள். இப்படத்தை பற்றி இயக்குனர் கே.பி. ஜெகன் கூறியதாவது : ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம் என்றார். மேலும், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர். யுனைடெட் ஆர்ட்ஸ் சார்பில் எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு சுகசெல்வம். இசை ஸ்ரீகாந்த் தேவா.