சென்னை: ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்க, கிளீம் புரொடக்ஷன்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் பல மொழிகளில் தயாரித்துள்ள அனிமேஷன் படம், ‘மகா அவதார் நரசிம்மா’. அதாவது, மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து ‘மகா அவதார் நரசிம்மா’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். ஷில்பா தவான், குஷால் தேசாய், சைதன்யா தேசாய் தயாரித்துள்ளனர். நாளை 3டியில்...
சென்னை: ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்க, கிளீம் புரொடக்ஷன்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் பல மொழிகளில் தயாரித்துள்ள அனிமேஷன் படம், ‘மகா அவதார் நரசிம்மா’. அதாவது, மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து ‘மகா அவதார் நரசிம்மா’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். ஷில்பா தவான், குஷால் தேசாய், சைதன்யா தேசாய் தயாரித்துள்ளனர்.
நாளை 3டியில் திரைக்கு வரும் இப்படம் குறித்து அஸ்வின் குமார், இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் இணைந்து அளித்த பேட்டி வருமாறு:
தொடர்ந்து 5 வருடங்கள் கடுமையாக உழைத்து, நரசிம்மர் மற்றும் வராஹரின் காவியக்கதையை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளோம். விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனை மையப்படுத்தி கதை நகர்கிறது. அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார். இறைவன் பிரம்மாவிடம் இருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகா அவதார் நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை படம் வெளிப்படுத்துகிறது. மிகப் பிரமாண்டமான காட்சிகள், சாம் சி.எஸ்சின் அற்புதமான பின்னணி இசையுடன் படம் உருவாகியுள்ளது.