Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கதை திரள்

சென்னை: எஸ்.எம். தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி.பி. பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி.

ரவி பிரகாஷ், நடிகர் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அல்பியா மீராராஜ் இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழமெங்கும் வெளியிடுகிறார்.

க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷனோடு, விறுவிறுப்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘திரள்’. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பற்றிய கதையாக உருவாகியுள்ளது.