Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாகுபலி வெளியாகி 10 வருடம் நிறைவு பார்ட்டி: ராஜமவுலி, பிரபாஸ், ராணா உற்சாகம்

ஐதராபாத்: பாகுபலி படம் 2015 ஜூலை 10ம் தேதி ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. பான் இந்தியா ஹிட் ஆன இந்த படம் வெளியாகி தற்போது 10 வருடங்கள் நிறைவு அடைந்திருப்பதால் அதை கொண்டாடும் விதமாக பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இணைத்து Baahubali The Epic என்ற பெயரில் வரும் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்ய இருக்கின்றனர். பாகுபலி 10 வருடங்களை கொண்டாடும் விதமாக ஐதராபாத்தில் நடத்த பார்ட்டியில் இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த பார்ட்டி படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.