Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திஷா பதானி சகோதரி அநாகரீகமாக பேசினாரா?

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி​யில் பாலிவுட் நடிகை திஷா பதானி​யின் வீடு இருக்கிறது. கடந்த 12ம் தேதி சில மர்ம நபர்​கள், திஷா பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பித்து ஓடினர். இதில் வீட்​டில் இருந்த யாருக்​கும் பாதிப்பு ஏற்​பட​வில்​லை. இந்த தாக்​குதலுக்கு ரோஹித் கோதாரா, கோல்டி பிரார் கும்பல் பொறுப்​பு ஏற்றுள்ளது. ஆன்​மீக தலை​வர்​கள் குறித்து அவதூறு கருத்து தெரி​வித்​ததற்​காக இந்​த தாக்​குதலை நடத்​தி​ய​தாக அந்த கும்பல் தெரி​வித்​திருந்​தது.

இச்சம்​பவம் குறித்து திஷா பதானி​யின் தந்தை ஜெக​தீஷ் சிங் பதானி கூறுகையில், ‘எனது மூத்த மகள் குஷ்பு பதானி​யின் (திஷா பதானி சகோ​தரி) கருத்து தவறாக புரிந்​து​கொள்​ளப்​பட்​டு இருக்கிறது. நாங்​கள் சனாதனிகள். சாதுக்​களை நாங்​கள் பெரிதும் மதிக்​கிறோம். இந்த விவ​காரத்​தில் எங்​களுக்கு எதி​ராக ஏதோ ஒரு சதி நடந்​துள்ளது. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என் மகள் அநாகரீ​க​மாக எதுவும் பேச​வில்​லை. அனிருதா ஆச்​சார்யா பெண்​கள் குறித்து ஒரு கருத்து தெரி​வித்​தார். என் மகள் ஒரு கருத்து தெரி​வித்​தார். அனை​வருக்​கும் கருத்து சுதந்​திரம் இருக்கிறது’ என்​றார்.

திஷா பதானி​யின் சகோ​தரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்​சார்யா பெண்​களை வெறுக்​கும் வகை​யில் கருத்து தெரி​வித்​திருப்​ப​தாக குற்​றம் சாட்​டி​யிருந்​தார். ஆனால், இந்​த கருத்து ஆன்மீக தலை​வர் பிரே​மானந்த் ஜி மகராஜை அவம​திக்​கும் வகை​யில் இருப்​ப​தாக செய்தி வெளி​யானது. இதற்கு குஷ்பு பதானி உடனடி​யாக மறுப்பு தெரி​வித்​திருந்​தார்.