Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வீட்டோடு மாப்பிள்ளை தேடும் அனுஸ்ரீ

சென்னை, ஜூலை 16: அனுஸ்ரீ நாயர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். பஹத் பாசிலின் டயமண்ட் நெக்லஸ் படத்தில் அறிமுகமான அனுஸ்ரீ தொடர்ச்சியாக மோகன்லால், மம்முட்டி உட்பட முன்னணி மலையாள நடிகர்கள் பலருடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ள அனுஸ்ரீ, தன்னை திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு கண்டிஷன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதாவது, தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் வீட்டோடு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பது தான் அந்த கண்டிஷன் என்றும் அனுஸ்ரீ கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘‘34 வருடங்களாக பத்தனம்திட்டாவில் வசித்து வரும் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு மாற எனக்கு விருப்பம் இல்லை. எனவே, வீட்டோடு மருமகனாக வர நினைப்பவர்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். அதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்ய உள்ளேன்’’ என்றும் திருமணம் குறித்த செய்தியை அனுஸ்ரீ உறுதிப்படுத்தியுள்ளார்.