பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கே.ஜி.எப் 1’ படம் மூலம் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்திய அளவில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா’ பிரபாஸ் நடித்து வெளியான ‘சலார்’ என அனைத்து படங்களும் உலகளவில் வசூலை வாரிக்குவித்தது. அந்தவகையில் தற்போது அனிமேஷன் வடிவில் ‘மகாவதார் நரசிம்மா’ என்ற படத்தை வழங்கியுள்ளது....
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கே.ஜி.எப் 1’ படம் மூலம் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்திய அளவில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா’ பிரபாஸ் நடித்து வெளியான ‘சலார்’ என அனைத்து படங்களும் உலகளவில் வசூலை வாரிக்குவித்தது. அந்தவகையில் தற்போது அனிமேஷன் வடிவில் ‘மகாவதார் நரசிம்மா’ என்ற படத்தை வழங்கியுள்ளது. ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை வழங்கியுள்ளது. இப்படத்தை அஸ்வின் குமார் எழுதி, இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் கிளீம் புரொடக்சன்ஸ் கீழ் தயாரித்துள்ளனர்.
கடந்த ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையப்படுத்திய அனிமேசன் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கிறது. ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போதுவரை 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய நாடுகளில் வெளியிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ்’மகாவதார் பரசுராம்’, ‘மகாவதார் ரகுநந்தன்’ என அடுத்தடுத்த படங்களை எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.