Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிப்புக்காக டாக்டர் படிப்பை துறந்தவர்

தமிழில் ‘சைத்தான்’, ‘சத்யா’, ‘கடாரம் கொண்டான்’, ‘ஐங்கரன்’, ‘கொலை’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘மதராஸி’, இந்தியில் ‘பரம் சுந்தரி’ ஆகிய படங்களில் நடித்த சித்தார்த்தா சங்கர், மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டை முடித்துவிட்டு, நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த அவர், திரைப்பட கல்லூரியில் திரைப்படம் குறித்து படித்தார். பிறகு நடிகர் நாசரிடம் நடிப்பு பயிற்சி பெற்றார். உடனே விஜய் ஆண்டனி மூலம் ‘சைத்தான்’ படத்தில் அறிமுகமானார். ‘கொலை’ படத்தில் தயாரிப்பு, நடிப்பு ஆகிய பிரிவுகளில் பணியாற்றினார்.

அவர் கூறுகையில், ‘இந்தியில் ‘பரம் சுந்தரி’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஜான்வி கபூரிடம் அவரது அம்மா ஸ்ரீதேவியை பற்றி பேசி நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். ஸ்ரீதேவி நடித்த ‘மூன்றாம் பிறை’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன். கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் குமார் ஆகியோரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.