Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நிவாஸ் கே. பிரசன்னாவுக்கு தொந்தரவுகள் தந்தேன்: பிரபு சாலமன் ஓபன் டாக்

சென்னை: டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசை. சுகுமார் ஒளிப்பதிவு. விழாவில் பிரபு சாலமன் பேசியது: டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார்.

அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னா ஆன்மாவை கொடுத்திருக்கிறார். படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார். இயக்குனர்கள் சரண், பிருந்தா சாரதி, நித்திலன் சாமிநாதன், மடோன் அஸ்வின், லிங்குசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.