Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முருகதாஸை கிண்டல் செய்த சல்மான்கான்

இந்தியில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் தன்னை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்துள்ளார், சல்மான்கான். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சமீபகாலமாக எந்த படத்திலும் நடித்ததற்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால் மக்கள், ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று சொல்கின்றனர். அதை நான் நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. ஆனால் இயக்குனர், தினமும் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததுதான் பிரச்னைகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டினார்.

அப்போது என் விலா எலும்பு உடைந்திருந்தது. சமீபத்தில் அந்த இயக்குனரின் மற்றொரு படம் வெளியானது. அதில் நடித்திருந்த நடிகர், 6 மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிடுவார். அந்த படத்தின் பெயர், ‘மதராஸி’. இது ‘சிக்கந்தர்’ படத்தை விட பெரிய அல்ல, மிகப் பெரிய பிளாக்பஸ்டர்’ என்று, கிண்டல் செய்யும் தொனியில் சிரித்தார். முன்னதாக ‘மதராஸி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிக்கந்தர்’ படத்தின் தோல்விக்கு காரணம், எப்போதுமே இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது, நடிகர் படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருவார் என்று குறிப்பிட்டிருந்தார். தவிர, அனைத்து காட்சிகளும் கிரீன்மேட்டில் படமாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் குறிப்பிட்டார். இதை மனதில் வைத்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸை சல்மான்கான் கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.