Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாரா அர்ஜூனை உருக வைத்த நபர்

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாகி, தற்போது ரன்வீர் சிங் ஜோடியாக ‘துராந்தர்’ என்ற இந்தி படத்தின் மூலம் முன்னணி ஹீரோயினாகி இருப்பவர், சாரா அர்ஜூன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் வாழ்க்கை பாதையை மாற்றியவர், முகேஷ் சார். சில நேரங்களில் ஒரு தந்தை இருக்கும்போதே வாழ்க்கை மெதுவாக மற்றொரு வழிகாட்டும் ஆளுமையை உங்கள் பாதைக்கு முன்னால் வைக்கிறது. அவரது நம்பிக்கை உங்கள் சொந்த வேர்களை மாற்றிவிடாது. மாறாக, அவற்றை அமைதியாக பலப்படுத்துகிறது. எனக்கு அந்த ஆளுமை நீங்கள்தான். இந்த உலகம் என்னை கவனிப்பதற்கு முன்பே நீங்கள் என்மீது அதிகமான நம்பிக்கை வைத்தீர்கள். அந்த அமைதியான நம்பிக்கை எல்லாவற்றையும் மாற்றியது. ‘துராந்தர்’ படத்தின் நடிகர்களின் தேர்வு பாராட்டப்படும் ஒவ்வொரு முறையும் நான் பெருமைப்படுகிறேன்.

ஏனென்றால், உங்கள் உள்ளுணர்வு, பார்வை, இதயம்தான் அந்த மாயத்தை வடிவமைத்தது. மற்றவர்கள் பெரும்பாலும் தவறவிடும் விஷயங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் வெறும் வாய்ப்புகளை மட்டும் வழங்குவதில்லை. மக்கள் தங்களை உருவாக்கிக்கொள்ள நீங்கள் இடமளிக்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் என்னை ஊக்குவிக்கிறது. உங்கள் அமைதியான வலிமை என் இதயத்தை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறது. விளம்பரம் முதல் ‘துராந்தர்’ வரை, இப்பயணத்தை ஒரு வரப்பிரசாதத்தை போல் உணர்கிறேன். ஒரு தந்தையின் நிழலும், தாங்கிக்கொள்ள தெரிந்த கையும் இருப்பது ஒரு வழிகாட்டுதல் என்று நம்புகிறேன். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையை எப்போதும் போற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.