சென்னை: ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த துஷாரா விஜயன் கூறியது: ‘அநீதி’ படத்தில் அர்ஜுன்தாசின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்தார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் ரொமான்ஸ் என்றாலே எங்களுக்கு சிரிப்பு வந்துவிடும். இந்தப் படத்தில் நடித்த அனைவரோடும் எனக்கு நல்ல நட்பு இருந்தது. படத்தில் ஏற்ற கேரக்டர் நான் செய்த அழகான ஒரு கேரக்டர். நான் தேர்வு செய்யும் கேரக்டர்கள் பெரும்பாலும் சவாலானவையாகவே அமையும். சினிமாவுக்கு நான் வருவதில் ஆரம்பத்தில் குடும்பத்தினரிடையே எதிர்ப்பு இருந்தது.
அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். வசந்தபாலன் சார் ரொம்பவும் கண்டிப்பானவர் என்று பலரும் பயமுறுத்தினர். ஆனால் அவர் அதுபோல் கிடையாது. சினிமாவை நேசிப்பவர். ஒவ்வொரு காட்சியிலும் குழந்தைக்கு சொல்லித் தருவதுபோல் சொல்லி என்னிடம் நடிப்பு வாங்கினார். முதலில் என்னை நிராகரித்தவர்கள் கூட சார்பட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு என்னை அழைத்துப் பேசுகின்றனர். இதையே என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன்.