மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சமந்தா, தன் கைவசமுள்ள படம் மற்றும் வெப்தொடரை முடித்துவிட்டு, 6 மாதங்கள் மேல்சிகிச்சை பெற்று, உடல்நிலை சரியாகும் வரை ஓய்வெடுக்கிறார். இதற்காக அவர் வெளிநாடு செல்கிறார். அதற்கு முன்பு இந்தியாவிலுள்ள முக்கியமான கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வேலூர் புரம் தங்ககோயிலுக்குச் சென்ற அவர், அங்குள்ள ஸ்வர்ணலட்சுமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தார். இதற்கு முன்பு பழநி, திருப்பதி உள்பட பல கோயில்களுக்கு சமந்தா சென்று வந்தார். சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அவர் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. விரைவில் அவர் நடித்த ‘குஷி’ தெலுங்கு படமும், இந்தி ‘சிட்டாடல்’ வெப்தொடரும் அடுத்தடுத்து வெளியாகின்றன.