சென்னை: ‘டிக்டாக்’ மூலம் பிரபலமாகி, பிறகு திரைப்பட நடிகையாக மாறியவர் சசி லயா. இலங்கையைச் சேர்ந்த அவர், தற்போது டி.வி தொடர்களில் நடித்து வருகிறார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஆர்த்தி ராவ் என்ற நடிகையுடன் டி.வி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது ஆர்த்தி ராவுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சசி லயா அமர்ந்துள்ளார். அந்த நாற்காலி தன்னுடையது என்றும், வேறு இடத்தில் உட்காரும்படியும் சசி லயாவிடம் ஆர்த்தி ராவ் சொல்லியிருக்
கிறார். இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பிறகு குடுமிபிடி சண்டையாக மாறியது. இதனால் கோபமடைந்த ஆர்த்தி ராவ் சசி லயாவை அடித்ததாகவும், பதிலுக்கு சசி லயா ஆர்த்தி ராவை திருப்பி அடித்ததாகவும் கூறப்படுகிறது. நிலமை விபரீதமாவதை அறிந்த டி.வி தொடர் இயக்குனர், உடனே இருவரையும் சமாதானப்படுத்தினார். இச்சம்பவம் டி.வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
197