ஐதராபாத்: சுகுமார் இயக்கிய ‘புஷ்பா’ படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக மாறிய அல்லு அர்ஜுன், மீண்டும் திரிவிக்ரம் னிவாஸ் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அவர்கள் ‘ஜூலாய்’, ‘சன் ஆப் சத்தியமூர்த்தி’, ‘அலா வைகுண்டபுரமுலு’ ஆகிய வெற்றிப் படங்கள் கொடுத்திருந்தனர். தற்போது அவர்கள் 4வது முறை இணைந்து பணியாற்றுவதை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ‘அலா வைகுண்டபுரமுலு’ என்ற படத்தில் இருந்து ‘சமஜவரகமனா’, ‘புட்ட பொம்மா’, ‘ராமுலோ ராமுலா’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.
இப்போது இந்திய திரையுலகில் இதுவரை பார்த்திராத காட்சிகளை திரையில் கொண்டு வர இக்கூட்டணி முடிவு செய்திருக்கிறது. திரிவிக்ரம் னிவாஸ் உருவாக்கிய ‘ரவீந்திர நாராயண்’, ‘விராஜ் ஆனந்த்’, ‘பாண்டு’ போன்ற கேரக்டர்களில் அல்லு அர்ஜூன் வாழ்ந்தார். இப்புதிய படத்தை ஹாரிகா அன்ட் ஹாசினி கிரியேஷன்ஸ் தனது 8வது படைப்பாக உருவாக்குகிறது. கீதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இதற்கு முன்பு இந்நிறுவனங்கள் ‘அலா வைகுந்தபுரமுலு’ என்ற படத்தில் இணைந்திருந்தது.