திருவனந்தபுரம்: பிரபல மலையாள இளம் நடிகை திவ்யா பிரபா. இவர் தமிழில் கயல் படத்தில் நடித்துள்ளார். நேற்று மாலை மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அவரது இருக்கை அருகில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென திவ்யா பிரபாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை திவ்யா பிரபா பலமுறை கண்டித்தார். குடிபோதையில் இருந்த அந்த நபர், திவ்யா பிரபாவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடிகையை தொந்தரவு செய்துள்ளார். உடனே விமான ஊழியர்களிடம் திவ்யா பிரபா புகார் செய்தார். ஆனால், அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகையை வேறு இருக்கையில் அமர வைத்துள்ளனர். இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்கியவுடன் இமெயில் மூலம் கொச்சி போலீசில் திவ்யா பிரபா புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை திவ்யா பிரபா, தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
192