சென்னை: ‘டூ ஓவர்’ படத்துக்காக திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற இயக்குனர் ஷார்வி, ‘பெட்டர் டுமாரோ’ படத்தை இயக்குகிறார். மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது.
போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்க படம் முயற்சித்துள்ளது என்கிறார் ஷார்வி. மானவ், கௌரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஷார்வி. ஒளிப்பதிவு பி.ஜீ.வெற்றிவேல், இசை குமாரசாமி, எடிட்டிங் ஈஸ்வரமூர்த்தி. பிரேமா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார். இணை தயாரிப்பு சரவணன்.