ஐதராபாத்: சுகு மார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பஹத் பாசில், சுனில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டான பான் இந்தியா படம், ‘புஷ்பா’. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகிறது. அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தேவி பிரசாத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் வீட்டில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினார்கள். இது தெலுங்கு படவுலகில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ‘புஷ்பா’ படம் குறித்து திருப்பதி பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஐஜி காந்தா ராவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அங்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்ேகற்ற அவர் கூறுகையில், ‘செம்மரக் கடத்தலை தடுப்பதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்த முயற்சி குறித்து தவறாக சித்தரிக்க வேண்டாம். ஒரு கடத்தல்காரனை ஹீரோவாக காட்டி விட்டு, பிறகு போலீசாரை லஞ்சம் வாங்கும் குண்டர்களாக காட்டியது வேதனை அளிக்கிறது. 2ம் பாகத்தில், கடத்தலை தடுக்க தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு காடுகளுக்குச் சென்று பணிபுரிந்து வரும் காவலர்களை மிகச் சரியான முறையில் காட்ட வேண்டும்’ என்று சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.