2018 என்ற மலையாள திரைப்படம், 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் 2018. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 2018 திரைப்படம் உருவானது.
டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 2018 திரைப்படத்தை ஜூட் ஆள்டனி ஜோசப் இயக்கியிருந்தார். அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் 2018 போட்டியிடும்.