ஜெயம் ரவி கூறும்போது, ‘மணிரத்னம் அவர்களிடம் ஒன்லைன் கதை சொல்வேன், அதைக் கேட்ட அவர் நீ தாராளமாக கதை எழுதலாம் என்று கூறினார். அவர் சொன்ன பிறகுதான் என் மீது நம்பிக்கை அதிகரித்து ஒரு சில கதைகளை எழுதி உள்ளேன். நடிகர் கார்த்தி இடம் கூட ஒரு கதை சொல்லி இருக்கிறேன், எனது இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிப்பார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஜெயம் ரவி இயக்குனராகவும் கார்த்தி ஹீரோவாகவும் நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி தற்போது ’இறைவன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ’சைரன்’ என்ற படத்திலும் நடித்து வரும் அவர் விரைவில் அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்திலும் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் ஒரு பேண்டஸி படம் என்றும் கூறப்படுகிறது. அவர்களுடன் விக்ரம், ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்களும் இந்த படத்தை பார்த்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.