ஐதராபாத்: இயக்குநர் ராஜமவுலி, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் ஆக்சன், அட்வென்சர் ஜானரில் இருக்கும் என்றும் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி ஏற்கெனவே கூறியிருந்தார். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாகும் என்றும் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதில் மகேஷ்பாபு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சீ இஸ்லன் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் அவருக்கு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் வென்றதால், சர்வதேச அளவில் ராஜமவுலி பிரபலமாகியுள்ளார். அதனாலேயே இதில் ஆங்கில படங்களில் நடித்துள்ள செல்சீயை தேர்வு செய்துள்ளாராம். இதில் மற்றொரு ஹீரோயினாக திஷா பதானி நடிக்கலாம் என கூறப்படுகிறது. இவர், சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
137