ஐதராபாத்: குண்டூர் காரம் படத்தில் பீடி பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தது பற்றி மகேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி மகேஷ் பாபு நடிப்பில் திரி விக்ரம் இயக்கிய குண்டூர் காரம் படம் திரைக்கு வந்தது. இதில் மகேஷ் பாபுடன் மீனாட்சி சவுத்ரி, லீலா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் சில இடங்களில் மகேஷ்பாபு பீடி பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. இது பற்றி கேட்டபோது, மகேஷ்பாபு கூறுகையில், ‘இது வழக்கமான பீடி கிடையாது. லவங்கம் இலைகளால் ஆன, மூலிகை பீடி. இதனால் உடல் நலத்துக்கு கேடு கிடையாது. அதைத்தான் படத்தில் பயன்படுத்தினேன். இதை படத்தில் அனைவரிடமும் விளக்கமாக சொல்ல முடியாது. அதனால்தான் தனியாக இது பற்றி விளக்கம் தந்துள்ளேன். என்னிடமிருந்து எதை பின்பற்ற வேண்டும் என்பது எனது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்’ என்றார்.
118