சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியானது. இன்னும் 20 நாட்கள் கூட முழுதாக முடியாத நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதில் பெரும்பாலும் தமிழகத்தில் தான் அதிக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியான ‘பிரேமலு’ மலையாள படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போது 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி, 150 கோடி என வசூல் செய்திருப்பது இந்திய திரையுலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நல்ல படங்கள் எதுவும் இல்லாததால் மலையாளத்தில் வெளியான இந்த இரண்டு படங்களையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படங்களின் வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணமாக உள்ளது.
127