திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார், மீனா. அனைத்து ெமாழி முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள அவர் கூறுகையில், ‘நடிகர் விஜயகுமார் தயாரிக்க, நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். சிவாஜி கணேசன் பிறந்தநாளில் அவருக்கு நான் மாலை அணிவித்தேன். அப்போது கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். என்னைப் பார்த்து, ‘இந்த சிறுமியை அந்த குழந்தை கேரக்டருக்கு பயன்படுத்துங்கள்’ என்றனர். அப்போது நான் முடி வெட்ட மறுத்ததால், எனது கேரக்டரில் சிறிய மாற்றம் செய்தனர். பிறகு ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தபோது, அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது, ரஜினிகாந்த் என்ற நடிகரைப் பற்றி தெரிந்து ஆச்சரியப்பட்டேன்.
நான் பள்ளிக்குச் சென்றபோது, அனைவரும் அவரைப் பற்றியே கேட்டனர். நான் ஹீரோயினாக நடித்த 2வது படம், ‘என் ராசாவின் மனசிலே’. இதில் ஒப்பந்தமானபோது, ஹீரோ யார் என்று தெரியாது. கேட்டபோது, ‘தயாரிப்பாளர்தான் ஹீரோ’ என்றனர். ஷூட்டிங் சென்ற பிறகு அவரைப் பார்த்தேன். கதைக்கு ஏற்ப கரடுமுரடாக இருந்தார். அவர்தான் ராஜ்கிரண். பிறகு நான் ரஜினிகாந்த் ேஜாடியாக ‘எஜமான்’ படத்தில் நடித்தேன். முதல் நாள் ஷூட்டில் நானும், ரஜினிகாந்தும் பேசவில்லை. என் அம்மாவிடம் வந்த ரஜினிகாந்த், ‘எனக்கு என்னவோ மாதிரி இருக்கு’ என்று அடிக்கடி சொன்னார். அதாவது, அப்படத்தில் நடித்தபோது எங்களுக்குள் இருந்த வயது வித்தியாசம்தான் இதற்கு முக்கிய காரணம். எல்லாமே நடிப்புதானே. அப்படி நினைத்துதான் ரஜினிகாந்துடன் நடித்தேன். அப்படத்தில் நடிக்கும்போது எனக்கு 14 வயது. இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சொன்னதை மட்டுமே செய்தேன். அருகில் மனோரமா, விஜயகுமார் இருப்பார்கள்.
அவர்கள் என்னிடம் நிறைய பேசுவார்கள். ரஜினிகாந்த் மட்டும் பேச மாட்டார். கமல்ஹாசன் ேஜாடியாக ‘அவ்வை சண்முகி’ படத்தில் நடித்த பின்பு, மீண்டும் அவரது ‘தெனாலி’ படத்தில் நடிக்க என்னிடம் கேட்டனர். அதாவது, இப்போது தேவயானி நடித்திருந்த கேரக்டரில் நடிக்க என்னிடம் கேட்டனர். ‘அவ்வை சண்முகி’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்துவிட்டு, அவர் நடிக்கும் வேறொரு படத்தில் இன்னொருவருடன் இணைந்து எப்படி நடிப்பது என்று தயங்கினேன். உடனே அவர்கள், ஜோதிகாவை ஒப்பந்தம் செய்து விட்டதாக சொன்னார்கள். என்றாலும், ஒரு சின்ன கேரக்டரிலாவது நடியுங்கள் என்று வற்புறுத்தியதால் அப்படத்தில் நடித்தேன்’ என்றார்.