மும்பை: நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வரும் நடிகையும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான டாப்ஸி, கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் சாட் மூலம் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த டாப்ஸி, ‘நான் இன்னும் தாய்மை அடையவில்லை. அதனால், இப்போது என் திருமணம் இருக்காது. அதுபற்றி உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்’ என்று சிரித்தபடி சொன்னார்.
சமீபத்தில் இலியானா, தனது திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் அடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களின் மூலம் தகவல் சொன்னார். இப்போது தன் குழந்தைக்கு தந்தை யார் என்பதை போட்டோ மூலம் சொல்லியிருக்கும் இலியானா, தனது காதலர் அல்லது கணவர் யார், எந்த ஊர், என்ன பெயர் என்பதை இன்னும் சொல்லவில்லை. இதைத்தான் டாப்ஸி மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். இதன்மூலம் இலியானாவை அவர் கடுமையாக தாக்கியிருக்கிறார் என்பது புரிகிறது. பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை டாப்ஸி சில வருடங்களாக காதலித்து வருகிறார்.